காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு ஈரான் விடுத்துள்ள செய்தி..!!!
காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இந்திய அரசாங்கம் ஒரு கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஈரான் தலைவர் அயோடொல்லா செய்ட் அலி கஹமீன் தெரிவித்துள்ளார். அதோடு காஷ்மீர் விவகாரத்தில் அங்கு வாழுகின்ற முஸ்லிம் மக்களின் மீது நடத்தப்படும் வன்முறையை இந்தியா தடுக்க வேண்டும் என கூறினார்.
ஈரான் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து ருவிற்றரில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தற்போது காஷ்மீரில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலை குறித்து கருத்தில் கொண்டுள்ளோம். இந்திய அரசு காஷ்மீரில் வசிக்கும் உன்னத மக்களுக்காக சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தியாவுடன் சிறந்த நல்லுறவு ஒன்று ஈரானுக்கு உள்ளது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல்கள் ஆகியவை இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும் போது, பிரித்தானிய அரசு மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளின் விளைவே ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.