இந்திய விமானபடை அதிகாரி அபி நந்தனை கொடுமை படுத்திய அதிகாரி அஹமத் கான் சுட்டுக் கொலை…!!
இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியான புல்வாமாவில் இராணுவ வீரர்களை குறிவைத்து கடந்த பெப்ரவரி 14ம் திகதி தற்கொலை தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் இராணுவ வீரர்கள் 44 பேர் மரணமடைந்ததுடன் ஏராளமான படையினர் காயமடைந்தனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் இந்த தீவிர வாத தாக்குதலுக்கு உரிமை கோரியதை தொடர்ந்து தீவிரவாதிகளை அழிக்கும் பணியின் இந்த படையினர் இறங்கினார்கள்.
இதில் ஒரு கட்டமாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பினரின் தீவிர பயிற்சி முகாமை குறிவைத்து பெப்ரவரி 26ம் திகதி பாகிஸ்தான் கடலோர பகுதியான பால்கோட்டில் விமானபடை தாக்குதல் இடம்பெற்றது. பயிற்சி முகாம்களை முற்றிலும் தரைமட்டமாக்கிவிட்டு திரும்புககையில் மிக் 21 விமானம் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப் பட்டது. இதனை ஓட்டிய பைலட் அபினந்தன் கைது செய்யப் பட்டார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் அழித்துவிட்டார்.இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டார். அதனை பின் விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் உலக நாடுகளின் வலியுறுத்தலின் பெயரில் அபி நந்தன் விடுதலை செய்யப் பட்டார்.
அபி நந்தன் கைது செய்யப் பட்ட போது அவரை பாகிஸ்தான் இராணுவ அதிகாரியான அஹமத் கான் என்பவர் விசாரணை செய்துள்ளார் அதன் போது அபி நந்தன் மோசமாக துன்புறுத்தப் பட்டதாக செய்திகள் வெளியாகியது.
இது இப்படி இருக்க குறித்த அதிகாரி இந்திய இராணுவத்தினரால் நேற்றைக்கு முன் தினம் சுட்டுக்கொல்லப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போதே இவ்வாறு சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். எல்லைப்பகுதியான நாக்யாலில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.