நேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கிரிஷ்ணா பஹதுர் மஹரா கைது…!!
நேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கிரிஷ்ணா பஹதுர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளது.
பெண் பணியாளர் ஒருவர் முன்வைத்து பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாள நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்த கிரிஷ்ணா பஹதுர் மஹரா கடந்த செவ்வாய்க்கிழமை தமது பதவி இருந்து விளக்கியுள்ளார்.
இந்த நிலையில், தலைநகர் காத்மண்டுவில் உள்ள நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.