நேபாளத்தில் ஏற்பட்ட கோர விபத்து..!! 14 பேர் உயிரிழப்பு..!
நேபாளத்தில் சிந்துபால்சாக் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 98 பேர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 9 பேர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 98 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு துலிகெல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதால் காரணமாக பஸ்ஸின் சில்லு சேதமடைந்தமையாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.