சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளிலும் அதிகமான பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளாக விளங்குகின்றன..!
சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் அதிகமான பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட CS Gender 3000 எனும் ஆய்வில் இரு நாடுகளும் முதலிடத்தை பிடித்துள்ளன.
இரு நாடுகளிலுல் உள்ள நிறுவனங்களில் 15 விழுக்காட்டு நிறுவனங்களைப் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் விளங்குகின்றனர். ஒப்பு நோக்க தாய்லந்தில் 9 விழுக்காட்டு நிறுவனங்களில் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் பொறுப்பு வகிக்கின்றனர்.பிலிப்பீன்ஸில் அந்த விகிதம் 8 விழுக்காடு வகிக்கின்றது.
56 நாடுகளில் உள்ள 3,000க்கும் மேலான நிறுவனங்களிடம் ஆய்வு காணப்பட்டுள்ளது. பொதுவான நிர்வாகப் பொறுப்புகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்பிலும் ஆய்வு கவனம் செலுத்தியுள்ளது. 23 விழுக்காட்டு நிர்வாக பொறுப்புகளை பெண்கள் வகிப்பதால், சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்ததுள்ளது. பிலிப்பீன்ஸ், தாய்லந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளானார்.