ஆசிய பெண் ஊழியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல்..! இது எங்க நடந்தது தெரியுமா??
ஆசியாவை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் கனடாவில் வைத்து இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டீஸ் கொலம்பியாவின் வான்கூவர் நகரில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்டது.
அங்காடிக்கு வரும் பெண்ணொருவர் ஆசிய பெண் ஊழியரிடம், கனடாவில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், நீ சீன மொழியில் பேசக்கூடாது என கூறி சண்டை பிடித்தார். அதோடு இனவெறியை தூண்டும் முறையில் தகாத வார்த்தைகளாலும் ஊழியரை திட்டினார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த சக ஊழியர்கள் அப்பெண்ணை கடையிலிருந்து வெளியில் போக சொன்னார்கள்.
அதன் பிறகு அவர்களையும் அந்த பெண் கோபத்துடன் திட்டியபடி இருப்பது போல வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்ட ஆலென் திஷிங் தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டிலும் இது போன்ற இனவெறி தாக்குதல் வான்கூவரில் நடப்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பல்பொருள் அங்காடியின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், நடந்த விடயம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது, தேவைப்பட்டால் எங்கள் ஊழியர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.