இலங்கைப் பிரதமர் விடுத்த முக்கிய அறிவிப்பு…!!!
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் தொடர்ந்தும் பிரதமராக பதவியில் இருப்பேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின்னர் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால், புதிய பிரதமராக ரணிலை நியமிக்க மாட்டார் என எதிரணியினர் தேர்தல் மேடைகளில் பேசி வருகின்றனர்.
முதல் வேலையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.