4 வயது பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் மரக்கரண்டியால் அடித்து காயப்படுத்திய தாய்..!!! சுவிட்சர்லாந்தில் அரங்கேறிய கொடூரம்..!!
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 4 வயதுடைய பெண் குழந்தை ஒன்றின் பிறப்புறுப்பில் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த பெண்ணின் தாய் அவளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு செய்ததாக சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை 132 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
அதையடுத்து வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், நீதிமன்றம் அவர் பெண்ணுறுப்பு சிதைப்பு செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
ஆண்மயில் சுவிட்சர்லாந்தின் Bellinzona என்ற இடத்தில் அந்த பெண் போர்ச்சுக்கீசியர் என்றும், அந்த நாட்டில் பெண்ணுறுப்பு சிதைப்பு கலாச்சாரம் இல்லை என்றும் கூறி அவர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த பெண் தனது குழந்தையை பல சமயங்களில் கரண்டியால் அடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆகவே இந்த முறை அவர் குறித்த குழந்தையை மரக்கரண்டியால் அடித்ததாலேயே அவளுக்கு பெண்ணுறுப்பில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நம்புவதாகத் கூறியுள்ள நீதிமன்றம், அந்த குழந்தையின் தாய்க்கு 20 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியதோடு, அந்த 35 வயதுடைய பெண், மனவியல் சிகிச்சைக்குட்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.