கிளர்ச்சிப் படைகள் மேற்கொண்ட தாக்குதல்..!!! 15 பேர் பலி..!
தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய இருநாட்டு எல்லையோர சோதனைச்சாவடியில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக பலியான கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உலகில் அனைத்து நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினை, கனிய வகை எண்ணெய் மற்றும் போக்குவரத்து பாதைகள், கடல் மார்க்கம், வானுர்தி போன்ற பல பிரச்சினைகளால் உலக நாடுகளுக்கு இடையில் மோதல்கள், தாக்குதல்கள் ஏற்படுகின்றது. பெரும்பாலும் நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சினை தான் தீவிரம் அடைந்து காணப்படுகின்றது.
அந்த வகையில் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய இருநாட்டு எல்லைப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தன்னாட்சி வேண்டும் என அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் அங்கு அரங்கேறி வருகின்றன.
மேலும் இந்த நிலையில் எல்லைப் பகுதியிலுள்ள யாலா மாகாணத்தில் உள்ள இரு சோதனைச் சாவடிகளில் கிளர்ச்சியாளர்கள் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர் . இந்த சம்பவத்தில் 15 தன்னார்வல பாதுகாவலர்கள் பரிதாபமாக பலியானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.