ஐ.எஸ் பயங்கவாதி தொடர்பில் துருக்கி உள்துறை அமைச்சர் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
உலகையே உருக்கிய ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக துருக்கி உள்துறை அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அன்மையில் சிரியாவில் ஒளிந்திருந்த ஐ.எஸ் பயங்கரவாதத் தலைவர் அல்-பாக்தாதி, என்பவர் அமெரிக்கா சிறப்பு படை மேற்கொண்ட நடவடிக்கையின் போது பாக்தாதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவிற்கு மிக முக்கிய நபர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சர் Suleyman Soylu குறிப்பிட்டுள்ளார். சந்தேக நபரிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணையை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த Suleyman Soylu, பொலிஸ் இருக்கும் முக்கிய நபர் தொடர்பாக எந்தவொரு தகவலும் இதுவரைக்கும் வழங்கவில்லை.
உயிரிழந்த ஐ.எஸ் பயங்கரவாதத் தலைவர் அல்-பாக்தாதியின் மனைவிகளில் ஒருவர், அவருடைய சகோதரி, மகள் என குடும்ப உறுப்பினர்கள் பலரை கைது செய்துள்ளதாக துருக்கி கூறியுள்ளது.
குர்திஷ் தலைமையிலான படைகளை வடகிழக்கு சிரியாவில் இருந்து முற்றாக விரட்டுவதற்காக சமீபத்திய இராணுவத் தாக்குதல் ஐ.எஸ் பயங்கரவாத வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து, ஐ.எஸ் உறுப்பினர்களைப் பிடிக்க துருக்கி தனது முழுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றதாக துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.