முகப்பரு, தழும்புகள் முகத்தை அசிங்கப் படுத்துகிறதா.!? இதோ நிரந்தர இயற்கை தீர்வு..!!
அழகாக இருக்க ஆசைப்படாத பெண்கள் இந்த உலகில் இருக்க மாட்டார்கள். அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்..ஆனால் இன்றைய காலத்தில் நாம் உண்ணும் உணவுகள், மற்றும் இன்றி நாம் சுவாசிக்கும் காற்றில் கூட விஷம் கலந்துள்ளது. அதனால் அழகை கெடுக்கும் முகப்பரு, மரு, கறுப்பு அடையாளம் எமது அடையாளத்தையே மாற்றிவிடும்.
இதற்கு கெமிக்கல் கலந்த கிரீம், அல்லது லோசன் பாவித்தால் உடனடியாக நீங்கினாலும் மறுபடி மீண்டும் வந்துவிடும். இன்று நாம் பார்க்கப் போவது நிரந்தமாக முகப் பருக்கள் மற்றும் அடையாளங்களை நீக்கும் இயற்கை மருத்துவத்தை தான். இதற்கு தேவையான பெருட்கள்: வெந்தயம், தேன், மற்றும் எலுமிச்சை. முதலில் வெந்தயம் ஒரு கைபிடி எடுத்து ஊறபோடுங்கள்.
சுமார் 8 மணி நேரம் வெந்தயம் ஊற வேண்டும். இரவு உறங்க செல்வதற்கு முன்பு ஊற போடலாம். நன்றாக வெந்தயம் ஊறிய பின் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். சிறிய பாத்திரத்தில் சிறிதளவு வெந்தய பேஸ்ட் எடுத்து அதில் சிறிது தேன் விட்டு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். எலுமிச்சையை பாதியாக வெட்டி மிக்ஸ் செய்து வைத்திருக்கும் பேஸ்ட்டில் தொட்டு முகத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
இப்படி பேஸ்ட்டை தொட்டு சுமார் 5 நிமிடம் வரை மசாஜ் செய்துவிட்டு 30 நிமிடம் விட்டு விடுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.. இதனை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தாலே மாற்றத்தை உணர ஆரம்பித்து விடுவீர்கள்.. இது தான் உங்களுக்கான நிரந்தர தீர்வு.. பயன்பெற்று அனைவரும் அறிய பகிருங்கள்…!!