வடகொரியா திடீரென ஏவுகணை சோதனை…!!!
அமெரிக்கா உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா இம்மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறி விட்டு இந்த சூழலில், இன்று அதிகாலை இருமுறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென்கொரிய தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட இது எந்த வகையைச் சேர்ந்தது என்று உடனடியாக விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து தகவலை அறிந்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், வடகொரியாவில் நிலவும் சூழலை நேச நாடுகளுடன் ஒன்றிணைந்து அவதானமாக கவனித்து வருகின்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.