அடையாளம் தெரியாத சில ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா..!!!
ஏவுகணைக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நாடுகளில் வடகொரியா முதலிடம் வகித்து வருகின்றது. அந்த வகையில் வடகொரியா அடையாளம் தெரியாத சில ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.
அமெரிக்கா வடகொரியாவுடன் மீண்டும் அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்குவதாக அறிவித்திருந்த நிலையில்; இந்த சோதனை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணை சோதனை ஜப்பானை நோக்கிய கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலதிக விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இருப்பினும், மேலதிக ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் குறித்து தமது இராணுவம் அவதானித்துக்கொண்டிருப்பதாக தென்கொரிய கூட்டுப் படைகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.