சக்தி வாய்ந்த 11வது ஏவுகணையை சோதித்த வடகொரியா…!!!
வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை ஏவப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. குறுந்தூர ஏவுகணைகளை கடந்த மே மாதம் முதல் தொடர்ச்சியாக வடகொரிய சோதனையை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் இந்த வருடம் 11 வது ஏவுகணையை வடகொரியா சோதித்திருந்தது. இந்த ஏவுகணை ஜப்பானின் கடற்பரப்பில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவின் இந்த செயற்பாட்டை அமெரிக்காவும் ஜப்பானும் கண்டித்துள்ளன.
இந்தநிலையில், வடகொரியாவின் செய்தி முகவரகமான கே.சி.என்.ஏ இந்த ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தி படங்களையும் செய்தியையும் வெளியிட்டுள்ளது.