நள்ளிரவு வேளையில் கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை…!!!
நள்ளிரவு வேளையில் கொழும்பில் பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அதிரடி படையினர் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பதாதைகள் கிழிக்கப்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இருதரப்பினரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளே இவ்வாறு கிழிக்கப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து அங்கு ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே இதனை கிழித்ததாக குற்றம் சாட்டினர். இதன் போது அங்கிருந்த பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த பகுதி முழுவது பதற்ற நிலை ஏற்பட்ட நிலையை தொடர்ந்து, அதிரடி படையினரின் பாதுகாப்புடன் கிழிக்கப்பட்ட பதாதைகளை மீண்டும் காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.