அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம்..!!!
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. டொனால்ட் டிரம்பின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் காங்கிரஸ் அவையை அவமதித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு இரு அவைகளிலும் விவாதித்து அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் 40 வாக்குகளை ஆதரவாக வழங்கியுள்ளனர்.
அதையடுத்து சம்பிரதாய அனுமதியைக் கோரி செனட் சபைக்கு இது அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் அனுமதி பெறப்படும். அதன் பின் அந்த பிரேரணைக்கு இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கண்டன தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில் டிரம்பின் பதவி பறிபோகும். மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ளும் 03ஆவது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என குறிப்பிடுகின்றது.