இந்தோனேசியாவில் செயற்கை மழையை வரவழைக்க தீவிர நடவடிக்கை…!!!
இந்தோனேசியாவில் செயற்கை மழையை வரவழைக்க தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயற்கை மழை பலன் கொடுக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
செயற்கை மழையை வரவழைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் அரை மணி நேரத்திற்குக் கடும் மழை பெய்ததாக கூறப்பட்டது.
மத்திய களிமந்தான் மாநிலத்தின் புலாவ் பிசாங் வட்டார வான்வெளியில் இருந்து 800 கிலோ கிராம் உப்பு தூவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை முறையில் மழையை வரவழைக்கும் நடவடிக்கைகள் முடக்கி விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.