துபாயில் உயிரிழந்த இந்தியரின் மனைவி..!! வங்கியில் பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கும் கணவர்…!!!
துபாயில் வசிக்கும் இந்தியரான நரேந்திர கஜ்ரியா தனது மனைவி ஹீனாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். மேலும் மனைவி ஒருநாள் ஹீனா திடீர் என்று உயிரிழந்துள்ளார். மனைவியின் இழப்பு இவருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும் இந்த நிலையில் கணவன் மாற்றம் மனைவி ஆகிய இருவர் பெயரிலும் சேர்த்து வாங்கி கூட்டு கணக்கு காணப்பட்டது. இந்த கணக்கில் கோடிக்கணக்கான பணம் வைப்பில் இட்டு இருந்தது. கணவர் அந்த பணத்தை எடுக்க முடியாமல் தவிர்த்தார்.
கஜ்ரியாவுக்கு என்று தனியாக வங்கி கணக்கு இல்லை, அதற்கு பதிலாக கஜ்ரியா மற்றும் ஹீனா பெயரில் கூட்டு வங்கி கணக்காக ஐக்கிய அமீரகத்திலுள்ள பல வங்கிகளில் 1 மில்லியன் டிராம்கள் ($272,242) இருந்தது. மேலும் இந்த நிலையில் ஹீனா எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்துள்ளார்.
இதன் பின் சட்ட வாரிசுகளுக்கு சான்றிதழ் கொடுப்பதற்கான நடைமுறையின் ஒரு பகுதியாக கஜ்ரியா – ஹீனாவின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டமை. இதன் போது கஜ்ரியாவால் வங்கியிலும், ஏடிஎம்மிலும் பணம் எடுக்க முடியாததோடு, அவர் வங்கி கார்டை வைத்து எந்த பொருளையும் வாங்கவும் முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனால் கையில் காசு இல்லாமல் தவித்து நின்ற கஜ்ரியா தன் கையில் இருந்த சிறிது பணத்தை வைத்து புதிய வங்கி கணக்கை தன் பெயரில் தொடங்கினார். மேலும் இது குறித்து கஜ்ரியா கூறும் போது நல்ல வேளையாக வங்கி கணக்கை தொடங்கிய அடுத்த நாளே எனக்கு சம்பளம் வந்ததால் என்னிடம் பணம் வந்தது என்று கூறினார்.
பணம் இல்லாமல் தவித்துவிட்டேன். இந்த பிரச்சனை ஐந்து மாதங்கள் சென்ற நிலையில் என் வங்கி கணக்கில் தற்போது அனைத்து பணமும் நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் வந்து விட்டதாகவும், ஐக்கிய அமீரகத்தில் கூட்டு வங்கி கணக்கு வைத்திருப்பது இவ்வளவு பெரிய தலை வலியை ஏற்படுத்தும் என எனக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது என கூறியுள்ளார்.