பெண் உறுப்பை சிதைத்து மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்..! கொலை செய்துவிடும்படி டாக்டர்களிடம் கெஞ்சும் 7 வயது சிறுமி..! அதிர வைத்துள்ள சம்பவம்..!!
பெற்றோர் மற்றும் உறவினரல் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி ஒருவர் தன்னை கொன்றுவிடும் படி வைத்தியர்களிடம் கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிக்கோ பியூப்லோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு போராடிய நிலையில் 7 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப் பட்டார்.
வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டதை தொடர்ந்து உயிர் ஆபத்தில் இருந்து குறித்த சிறுமி தப்பினர். இதனை தொடர்ந்து வைத்திய அறிக்கையில் குழந்தையை பெற்றோர் கொடுமை படுத்தியது தெரியவந்துள்ளது. குழந்தையின் நுரையீரல் பகுதி பாதிக்கப் பட்டுள்ளதுடன், பிறப்பு உறுப்பு முற்றிலும் சிதைந்துள்ளது, அத்துடன் உதிரப் போக்கு அதிகம் உள்ளது,
அது மட்டும் இன்றி குழந்தையின் தொடை மற்றும் வயிறு, கைகளில் சிகரெட்டால் சுட்ட புண்கள் உள்ளது, அத்துடன் குழந்தையை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் எனவும் மருத்துவ அறிக்கை வெளியானது. இதனை தொடர்ந்து சிறுமி வசித்த குடியிருப்பு பகுதியில் பொலீஸார் விசாரணை செய்த போது கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியின் 3 வயது சகோதரி மரணமடைந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோரை கைது செய்த பொலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபராக கருதப் படும் உறவினர் தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் தான் குணமடைந்து வருவதால் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் வைத்தியர்களிடம் “என்னை கொலை செய்து விடுங்கள்” வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!