“பணம் தந்து ஆபாசமாக பேச சொன்னார்கள், பேசினோம்” யூடியூப் வீடியோக்களில் ஆபாசமா பேசிய பெண்கள் அதிரடி.!! பணத்திற்காக இப்படியா.!?
பணம் கொடுத்து ஆபாசமாக பேச சொன்னதாக இளம் பெண்கள் பொலீஸ் விசாரணையில் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அண்மையில் வீதி, பீச், பார்க் என பெண்கள் செல்லும் இடங்களில் ஆபாச கேள்விகள் கேட்டு வீடியோ எடுத்த யூடியூப் இளைஞர்களை பொலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் 200 க்கு மேற்பட்ட பெண்கள் ஆபாசமாக பேசும் வீடியோக்கள் இருந்து கைப்பற்றப் பட்டது.
யூடியூப் இளைஞர்கள் தங்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்பதாக கூறி பெண் ஒருவர் பொலீஸில் கொடுத்த புகாரின் பேரிலேயே மூன்று இளைஞர்களும் கைது செய்யப் பட்டனர். இதனை தொடர்ந்து ஆபாசமாக பேசிய பெண்களையும் விசாரிக்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து பொலீஸார் வீடியோவில் உள்ள பல பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
இதன் போது முதலில் ஆபாசமாக பேச முடியாது என்று தாங்கள் மறுத்ததாகவும் குறித்த இளைஞர்கள் நாம் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தால் போதும் என்றும் ஒவ்வொரு கேள்விக்கும் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பொது இடத்தில் இளைஞர்கள் யூடியூபிற்காக வீடியோ எடுத்தது தவறு என்றாலும் பெண்கள் பணத்தை வாங்கிக் கொண்டே ஆபாசமாக பேசியுள்ளனர், இரண்டு பக்கமும் தவறு உள்ளது, அதனால் தண்டனையை இரு பக்கத்திற்கும் கொடுங்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.!!