இரத்தம் மாற்றி ஏற்றியதால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…
ஏறாவூர் – வந்தாறுமூலை, பலாச்சோலையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனொருவன் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.அதன் பின்னர் சுகமான நிலையிலிருந்த சிறுவன் திடீரென நோய் வாய்ப்பட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்ட்டு வந்துள்ளது,இந்த நிலையில் சிறுவனின் சிறுநீரக பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தந்தை கூறியுள்ளார்,
எனினும் சிறுவனிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 17ஆம் சிறுவன் அசைவற்ற நிலையில் காணப்பட்டமையை அவதானித்த நிலையிலேயே அவருக்கு தவறான முறையில் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இறந்து விட்டார் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
உயிரழந்த சிறுவனின் தந்தை மேலும் கூறுகையில்,விபத்தில் காயமடைந்த எனது மகனுக்கு இரத்தம் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை.எனது மகனின் உயிரிழப்பு தொடர்பில் தகுந்த நியாயம் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.