சீனாவிலுள்ள பூங்கா இழுத்து மூடப்பட்டதிற்கு காரணம் என்ன தெரியுமா?
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் பூங்கா ஒன்று கட்டுமானப் பணிகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்படவிருந்தது. ஆனால் இப்பொழுது அது மூடப்பட்டுள்ளது.
இந்த பூங்கா மூடப்பட்டது காரணம் .பூங்காவிலுள்ள தாமரை மலர்கள் அனைத்தும் காணாமல் போனதால்.
சீச்சுவான் (Sichuan) வட்டாரத்திலுள்ள Longqiao பூங்காவிற்கு அழகு சேர்ப்பதே 250,000 சதுர மீட்டர் பரப்பளவில் நிரம்பியிருக்கும் தாமரை மலர்கள் தான் காணாமல் போன நிலையில் இது மூடப்பட்டது.
கடந்த மாதத்தில் இருந்து தாமரை மலர்களை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பறித்துச் சென்றுவிட்டதால் அங்கு தற்போது மலர்களே இல்லை என்று பூங்காவின் நிர்வாகக் குழு கூறியுள்ளது.
இதனால் பூங்கா இவ்வாண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒவ்வொரு நாளும் சுமார் 200இலிருந்து 300 பேர் அனுமதி இல்லாமல் பூங்காவினுள் நுழைந்து தாமரை மலர்களைப் பறிப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தாமரை மலர்களை பறிக்கும் படங்களும் காணொளிகளும் இணையத்தில் பரவி வருகிறது எனவும் தெரிவித்தனர்.