இலங்கை ஜனாதிபதியை வெளுத்து வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ..!!
தமிழ் மக்களின் விடிவிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டத்தை இலங்கை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார். மேலும் ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் பாதித்துள்ளதுடன் விசனத்தையும் அள்ளி வீசியுள்ளது எனவும் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் ரன் மாவத் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீதியினை காபட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தே போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போதைப்பொருளை விற்றுத்தான் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததுமில்லை, செயற்படுத்தியதும் இல்லை. ஓட்டுமொத்த தமிழ் இன மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதிப்பங்களிப்புடனும் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடனுமே அவர் போராட்டத்தை நடத்தினார். தமிழ் பெண்கள் தமது தாலியினை கூட பொருள்படுத்தாமல் வழங்கி அன்று போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்கள்.
இந்த நிலையில் தமிழ் மக்களினால் தியாகியாகவும் கடவுளாகவும் பார்க்கப்பட்ட புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போராட்டத்தையும் போதைப்பொருளையும் ஒப்பிட்டு ஜனாதிபதி கொச்சைப்படுத்திய சம்பவம் தமிழ் மக்களிடையே விசனத்தை அள்ளி வீசியத்தோடும், அவர்களிடையே வெறுப்பு நிலையையும் உருவாக்கியுள்ளார் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல தந்திரமான வேலை திட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றது. மேலும் இந்த திட்டத்தின் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு புறம் முயற்சிகளை மேற்கொள்ளும் போது நலிவுற்ற தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் பல செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றது என்றும்
ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளருமான ஆர்.ஜெகநாதன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வின் பொது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளரும் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பதவியுர்வு பெற்று செல்பவருமான ரி.கஜேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்..!!