குகையில் சிக்கிய கால்பந்து மாணவர்களும் பயிற்சியாளரும் , மீட்கப் போராடும் தேசம்
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் 12 கால்பந்து மாணவர்களும் 1 ஆசிரியரும் வழிதவறி குகையொன்றி சிக்கியுள்ளனர். இந்த சம்பவமானது நிகழ்ந்து ஒரு வாரம் ஆனபோதிலும் இன்று வரை அவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
25 வயதான கால்பந்து கோச்சுடன் குகையில் சிக்கிக் காணாமல் போயுள்ள 12 சிறுவர்களையும் தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வரும் அதே வேளை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பலரும் சமூக வளைத்த தளங்களில் அவர்களை காப்பாற்றக் கோரி தங்கள் துயர்களை பகிர்ந்து வருகின்றமையும் நெகிழ்ச்சிக்குரியதாகும்.
குகையில் சிக்கியவர்களை சுரங்கம் அமைத்து மீட்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளை
மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது மீட்புப் பணிகளை மேலும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
மீட்புப் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இராணுவம் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து அவர்களை மீட்பதற்கு போராடி வருகின்றனர். எனினும் அவர்கள் ஐவரும் உயிருடன் இருப்பதாகவே இன்றுவரை நம்பப்படுகின்றது. அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அவர்களை மீட்டெடுப்பதற்கான பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்ளின் பிரார்த்தனை குகையில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே உலகின் எதிர்பார்ப்பும்கூட.