இன்றைய ராசி பலன் 26.04.2019
இன்றைய ராசி பலன் படிக்க வந்திருக்கும் எம் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், அனைவரும் நலமா? வாருங்கள் உங்கள் ராசிக்குரிய இன்றைய தினப் பலனை அறிந்து கொள்வோம்.26-04-2019, சித்திரை 13, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 11.14 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் இரவு 11.14 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷராசி நேயர்களே:புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
ரிஷப ராசி காரர்களே:பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சில இடையூறுகள் உண்டாகலாம். புதிய யோசனைகள் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
மிதுனராசி காரர்களே:: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
கடகராசி நேயர்களே:சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
சிம்மராசி அன்பர்களே:உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மங்கள நிகழ்வுகள் நடைபெறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
கன்னி ராசி காரர்களே:பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள்.. கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
துலாராசி உறவுகளே:வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. சக வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
விருச்சிகராசி நேயர்களே:விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும்.புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தனுசுராசி அன்பர்களே:கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல், வீண் டென்ஷன், அலைச்சல் யாவும் நீங்கும்.அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயன் தருவதாக இருக்கும்.
மகரராசி காரர்களே:நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.
கும்பராசி உறவுகளே:உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும்
மீனராசி நேயர்களே:வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும்.
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”