தமிழரின் தலைவர் பிரபாகரன் இருந்தால் தமிழர் மீது சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா?
ஈழ தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? தமிழர்களின் உரிமை பறி போயிருக்குமா? தமிழரின் தலைவர் இருந்தால் கன்னியா வெந்நீரூற்று பிரச்சனை நீண்டு கொண்டு இருக்காது. அதோடு தமிழர்களின் இந்து கோவிலை இடித்து அதே இடத்தில் விகாரை அமைக்க முடியுமா ? என சார்ள்ஸ் நிர்மலநாதன் பல கேள்வி எழுப்பியுள்ளார் .
மேலும் இந்த கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸார் முன்னிலையில் சுடுநீர் ஊற்றினார். இதுவே தமிழர் ஒருவர் பிக்கு மீதோ, அல்லது சிங்களவர் மீதோ சுடுநீர் ஊற்றி இருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எந்த ஒரு விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை. தமிழர்களுக்கு எந்த அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற சிங்களவர்கள் இறுமாப்பிலேயே இவ்வாறு ஆடுகிறார்கள். தமிழரின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா?
இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் , ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன்?
பௌத்த பிக்கு ஒருவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றாரா? இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு எடுத்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.