கணவருடன் லாட்ஜில் தங்கிய இளம்பெண்..!!! பின்னர் நடந்த கொடூர செயல்..!!
இந்தியாவில் பரசலூர், மகாராஜபுரத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சித்ரா என்ற இளம்பெண்ணிற்கும், , திருவாரூர் மாவட்டம், சிறுபுலியூரைச் சேர்ந்த 30 வயதுடைய ராஜ்குமார் என்ற இளைஞனுக்கும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி திருமணம் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சித்ரா வீட்டிற்கு வந்த ராஜ்குமார் சித்ராவின் பெற்றோர் சம்மதத்துடன், சித்ராவை திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை, இருவரும் திருச்சி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.
பின்னர் ராஜ்குமார் வேலைக்கு செல்ல, சித்ரா மட்டும் தனியாக லாட்ஜில் இருந்தார். பின்னர் காலை, 10:20 மணிக்கு சித்ரா தொலைபேசி மூலம் ராஜ்குமாருடன் பேசியுள்ளார். இதன் பின்னர் 11:௦௦ மணிக்கு ராஜ்குமார் லாட்ஜ்க்கு வந்த போது துாக்கில் தொங்கிய நிலையில் சித்ரா இறந்து கிடந்தாள்.
இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், ஆம்புலன்ஸ் மூலம் சித்ராவின் சடலத்தை அவர் வீட்டிற்கு எடுத்து சென்றார். சித்ரா உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை, சித்ராவின் பெற்றோர்கள் தொடங்கியுள்ளனர். இதை பார்த்த கிராம மக்கள் சந்தேகமடைந்து சித்ராவின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர் பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சித்ரா வீட்டிற்கு வந்த பொலிஸார் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.