கிரிமெட்டியகார பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து..!! இளைஞன் ஒருவர் பலி..!!!
கிரிமெட்டியகார பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கம்பம் ஒன்றுடன் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
17 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த இளைஞன் அதிக வேகத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பட்டை இழந்து கம்பத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.