தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்த எச்சரிக்கை …!!!
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று முற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. அதை தொடர்ந்து வேட்பாளர்களுக்கு வேட்பு மனு தாக்கல் தொடர்பில் ஆட்சேபனைக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.
ஆட்சேபனை கால அவகாசத்தினை அடுத்து எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களுக்குமான தேர்தல் விதிமுறைகளும் நிபந்தனைகளும் மஹிந்த தேசப்பிரியவால் வாசிக்கப்பட்டது.
அதையடுத்து தேர்தல்கள் தொடர்பாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமானது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வாசிக்கப்பட்டது.