தாங்க முடியாத மூட்டு வலியா.!? ஒரு பிடி முடக்கத்தான் போதும்..! இதோ உங்களுக்கான உடனடி மருத்துவம்..!!
பொதுவாக யாரிடம் கேட்டாலும் மூட்டு வலி இல்லை என யாருமே சொல்ல மாட்டார்கள். காரணம் மூட்டு வலி எல்லோரையும் கொடுமை படுத்துகிறது. குறிப்பாக அதிக நேரம் நாட்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்கள், அதிக நேரம் நின்ற படி வேலை செய்பவர்கள், விளையாட்டு துறைகளில் பணி புரிவோர், இவர்களை தான் இந்த மூட்டுவலி அதிகம் தாக்குகின்றது. இதற்கு தீர்வை தான் இப்போது பார்க்கப் போகின்றோம்.
இதற்கு தேவையான பொருட்கள்: முடக்கத்தான் ஒரு பிடி, பெருங்காயம் சிறிய துண்டு, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணை, இப்போது எப்படி செய்வது என பார்க்கலாம். முடக்கத்தான் கொடியோடு எடுத்து கழுவி ஒரு பிடியை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மா போல் அரைக்க தேவை இல்லை.
பெருங்காயத்தை துண்டுகளாக தட்டிக் கொள்ளுங்கள். இப்போது நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையை அடுப்பில் வைத்து சூடாக்குங்கள் கொஞ்சம் சூடாகும் போது அதில் அரைத்து வைத்திருக்கும் முடக்கத்தான் பேஸ்ட் போடுங்கள். அதன் பின் சூடம், மற்றும் பெருங்காய துளை போட்டு கொஞ்சம் கிளறி
நன்றாக மிக்ஸ் ஆகி கொஞ்சம் அடுப்பில் வையுங்கள். இவற்றை மிதமான சூட்டில் வைய்யுங்கள். பின் இறக்கி மூட்டில் வைத்து கட்ட கூடிய சூட்டில் வைத்து கட்டிக் கொள்ளுங்கள். ஆக குறைந்தது மூன்று மணி நேரம் இதனை கலட்ட கூடாது. இப்படி மூன்று நாட்கள் செய்தால் எலும்புகள் பலப் படுவதுடன் இனி ஜென்மத்தில் மூட்டு வலி வராது..!