நபர் ஒருவரை குப்பையில் தூக்கி வீசியது போன்ற பல குற்றங்களை புரிந்த 28 வயது நபருக்கு சிறை..!!
சிங்கப்பூரில் நபர் ஒருவரை குப்பையில் தூக்கி வீசியது போன்ற பல குற்றங்களை செய்த நபருக்கு ஒரு வாரமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 28 வயதுடைய விக்னேஸ்வரன் குணசேகரன் என்ற நபர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி வேலையில்லாமல் இருந்த விக்னேஸ்வரன் தனது நண்பர் ஹரவிந்துக்கு உதவ அங் மோ கியோ சென்றிருக்கிறார். ஹரவிந்த் அங்கு மற்ற சிலருடன் குடித்துக்கொண்டிருந்தார். ஹரவிந்த், விக்னேஸ்வரனைத் தன்னுடன் குடித்துக்கொண்டிருந்த ஒருவரைத் தாக்கும் படி கூறியிருக்கிறார். மூவருக்கும் இடையில் கைகலப்பு மோசமானது. பாதிக்கப்பட்ட நபர் தப்பி ஓட முயன்ற போது, விக்னேஸ்வரனும், ஹரவிந்தும் அவரைப் பிடித்து அடித்து, தூக்கிச் சென்று அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். அதையடுத்து விக்னேஸ்வரன் மேலும் பல குற்றங்களைப் செய்திருக்கிறார். திருட்டு, அடிதடி போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. ஹரவிந்த் மீது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.