சிங்கப்பூரில் வசிக்கும் மூன்று இலங்கையருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி..!!
சிங்கப்பூரில் வசித்து வரும் மூன்று இலங்கையருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் 44,37, மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று ஆயிரம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே பிரான்ஸ், லண்டன் மற்றும் அமெரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டு இலங்கையர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.