சிங்கப்பூரிலுள்ள அனைத்து McDonald’s விரைவு உணவு கிளைகளும் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடல்..!!
சிங்கப்பூரிலுள்ள அனைத்து McDonald’s விரைவு உணவு கிளைகளும் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்படுகின்றன. கொடிய கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி திட்டம் மே மாதம் 4 ஆம் திகதி நடப்பில் இருக்கும் வரை உணவக சேவைகளை McDonald’ நிறுத்திக்கொள்கிறது.
உணவு விநியோகச் சேவை காலை 10.30 மணியுடனும் ‘Drive-through’ சேவை காலை 8 மணியுடனும் நிறுத்தப்படுகின்றன. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி கிளைகளை மூட தீர்மானித்ததாக McDonald’s உணவகம் தெரிவித்தது. அத்தகைய காலக்கட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படும் என்றும், உணவக சேவைகளை மே மாதம் 5ஆம் திகதி அன்று மீண்டும் தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் McDonald’s தெரிவித்துள்ளது. 4 கிளைகளில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நேரடியாக சென்று உணவு வாங்கிச் செல்வதை McDonald’s ஆக அண்மையில் தடை செய்துள்ளது.