முதன் முறையாக இன்று 2 விண்வெளி வீரர்களுடன் செல்கிறது Space X ராக்கெட்!
இன்றைய தினம் அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் என அறியப்படும் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ஏவப்படும் ராக்கெட்டில் 2 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படவுள்ளனர். புளோரிடாவிலுள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்படுகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாசாவைச் சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய 2 வீரர்கள் ஃபால்கன் 9 ராக்கெட்டில் பயணிக்கவுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்வது இதுவே முதன் முறையாகும். 2011 ஆம் ஆண்டிருந்து நாசா தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை அனுப்புவது இல்லை என்பதும், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலமே வீரர்களை அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.