முகம் தெரியாத பெண்னை உயிருக்கு உயிராக காதலித்த இளைஞன்..! பின்பு நடந்த எதிர்பாராத விபரீத செயல் !
இந்தியாவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனியார் ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் பணி செய்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம் திருவெரும்பூரிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர் ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கி கொண்டுள்ளார். சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்த ஆனந்தகுமார், உறவினர் வீட்டில் இருந்தார்.இவர் சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் மூழ்கியுள்ளார்.
அப்போது பெண் பெயரில் இருந்த ஐடியில் இருந்தவரிடம் ஆனந்த குமார் பேசினார். ஆனால், அந்த ஐடியில் இருப்பது பெண்ணா ஆணா என்பது பற்றி தெரியவில்லை. இருவரும் முதலில் நண்பர்களாக கதைத்தனர். அதன் பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர். ஆனந்தகுமார் குறித்த பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் இன்ஸ்டாகிராமில் ஆனந்தகுமாரை பிளாக் செய்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஆனந்தகுமார் அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்ப எந்தெந்த வழிகளிலும் முயற்சி செய்தும் நடக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்துள்ளார்.இதை கவனித்த அவரது குடும்பத்தினர் ஆனந்தகுமாரை சமாதானப்படுத்தினர். ஆனாலும், சோகத்தில் மூழ்கியிருந்த ஆனந்தகுமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும் இந்த சம்பம் தொடர்பாக தகவலறிந்து திருவெறும்பூர் பொலிஸார் விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விசாரணையை மேற்கொண்டார். அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில், தற்கொலைக்கு முன்பு, அந்த பெண் இதுவரை அனுப்பிய எல்லா மெசேஜ், வீடியோக்களையும் ஆனந்தகுமார் டெலிட் செய்துள்ளார். முகம் தெரியாத காதலியை காப்பாற்ற தடையங்களை ஆனந்தகுமார் அழித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.