நிச்சயமாக இதை செய்யாதீர்கள்… மீறி இதை செய்தால் 5,000 டொலர்கள் அபராதம் விதிப்பு..!! கனேடிய அரசாங்கம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!
கனடா வாழ் மக்களே தங்களுக்கு உயிரைக் குடிக்கும் கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்று இப்பதாக பொய் சொல்லி கொரோனா அவசர நிதியுதவி கோருவோர் 5,000 டொலர் வரை அபராதம் செலுத்த வேண்டி வரும் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கை விரைவில் சட்டமாக்கப்படவுள்ளது. தவறான ஒரு கோரிக்கை, சரியான வருவாயை தெரிவிக்க தவறுதல், தனக்கு நிதியுதவி கோர தகுதி இல்லை என்று தெரிந்தும் உதவி பெறுதல், உண்மைகளை மறைத்தல் ஆகிய அனைத்தும் அந்த சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
கனேடிய அரசாங்கம் பிறப்பித்த குற்றங்களுக்கு தண்டனையாக 5,000 டொலர்கள் அபராதம், ஏமாற்றி பெறப்பட்ட தொகையை விட இருமடங்கு திருப்பிக் கொடுத்தல் ஆகியவை விதிக்கப்படவுள்ளன. அல்லது 5,000 டொலர்கள் அபராதத்துடன் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். வேலை செய்ய மறுத்து, தொடர்ந்து நிதியுதவி பெறுதலுக்கும் அபராதம் உண்டு.