தாலி கட்டிய பின்னர் மணமக்கள் ஏன் அக்னியை 7 அடிகள் சுற்றுவது தெரியுமா?
திருமணத்தின் போது தாலி கட்டிய பின்னர் மணமகனும், மணமகளும் ஒன்றாக கை கோர்த்து அக்னியை சுற்றி வலம் வருவார்கள். இந்த வலமானது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியதி, அதுவே சம்பிரதாயமாகும். ஆகவே, திருமணத்தில் மணமக்கள் ஒன்றாக 7 அடிகள் எதற்காக வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
முதல் அடி : பஞ்சமில்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
இரண்டாவது அடி : நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
மூன்றாவது அடி : மங்களகரமான நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
நான்காவது அடி : இன்பத்தையும், செல்வத்தையும் கொடுக்க வேண்டும்.
ஐந்தாவது அடி : லட்சுமி கடாட்சம் பெற வேண்டும்.
ஆறாவது அடி : நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
ஏழாவது அடி : தான தர்மங்கள் எப்பொழுதும் நிலைக்க வேண்டும்.
இந்த சம்பிரதாயங்கள் மனிதர்களிடம் இருக்கும் மிக சூசகமான மனோவியல் விஷயத்தை நம் முன்னோர்கள் உணர்த்தியுள்ளார்கள்.