கல்லூரி மாணவியின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து செல்ஃபி எடுத்த இளைஞன்..!! பின்னர் நடந்த விபரீதம்..!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அக்கா மகள் 22 வயதுடைய மோனிஷா என்பவர் அரசு கல்லூரியில் படித்து வருகிறார். மோனிஷாவின் பெற்றோர் உயிரிழந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மோனிஷாவை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்தார். மோனிஷா தினமும் கல்லூரிக்கு செல்லும் நேரத்தில், தன்னை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி வந்தார்.
குறித்த மாணவி இளைஞனின் காதலை மறுத்து வந்ததால், அந்த இளைஞன் ஒரு நாள் குறித்த மனைவியின் கையை பிடித்து இழுத்து, ஒன்றாக இருப்பது போல் போனில் புகைப்படம் எடுத்தார்.
அதன் பின்னர் தன்னை காதலிக்காவிட்டால் அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவதாக மோனிஷாவை மிரட்டினார். அதைத் தொடர்ந்து, பதறிப்போன மாணவி மன வேதனை அடைந்து இளைஞனின் காதல் தொல்லை தொடர்பாக கடிதம் எழுதி விட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குறித்த இளைஞனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.