முகத்தின் அழகை அதிகப் படுத்தும் அற்புத முறை..! பியூட்டி பர்லர் வேண்டாம்…ஆவி பிடியுங்கள் போதும்..!
பக்கவிளைவுகள் ஏதுமின்றி உங்கள் முகத்தை பொலிவாகவும் பளபப்புடனும் வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றீர்களா? அப்படியென்றால் தினமும் ஒரு தடவை முகத்திற்கு ஆவி பிடியுங்கள். இத ஒரு சிறந்த தோல் சிகிச்சையாகும், அது உங்கள் சருமத்தை தூய்மைப்படுத்துகிறது, ஊட்டமளிக்கிறது, பளபளப்பாக்கின்றது.
இது ஒரு பரிசோதிக்கப்பட்ட ஒரு சிகிச்சை முறையாகும், ஆனால் நேரம் இல்லாததால் இந்த நாட்களில் இது அரிதாகவே செய்யப்படுகிறது. இன்னும், உங்கள் தோல் ஆரோக்கியமான மற்றும் அசுத்தங்கள் இல்லாமல் வைத்திருக்க எளிய மற்றும் சிறந்த வழிகளில் இது ஒன்றாகும்.முதலில் முகத்திற்கு ஆவி பிடிக்கும் முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் .உங்கள் முகத்தை ஒழுங்காக கழுவுங்கள் ஏனென்றால் முகத்திலுள்ள ஒப்பனை, அழுக்கு, எண்ணெய் அல்லது வியர்வை ஆகியவற்றை நீக்கி மென்மையாக சுத்தப்படுத்தி உங்கள் முகத்தை நீராவியை உள்வாங்கக் கூடிய துளைகளை திறந்துவிடுகின்றது.
கடுமையான சோப்பு அல்லது துடைப்பை உங்கள் முகத்தை கழுவ வேண்டாம், ஏனெனில் அது எரிச்சலை உண்டாக்கும்.வேப்பமிலை அல்லது தேசி இலையை கொதிக்க வைத்த நீரிற்குள் இடுங்கள்.இறுதியாக முகதத்திற்கு நீராவியை பிடித்துக் கொள்ளுங்கள்.சரி இந்த நீராவியை முகத்திற்குப் பிடிப்பதால் என்னென் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கி்னறது என்று பார்க்கலாம்.
சருமத்தின் துளைகளைத் திறக்கின்றது.முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலமாக சருமத்தின் துளைகளைப் பராமரிக்க முடியும். இதன் மூலமாக முகப் பருக்கள் , கரும்புள்ளிகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். சருமத்துளைகளை மாசுக்கள் அடைத்திருக்கும். ஆவி பிடிப்பதன் மூலம் அந்தத் துளைகளை திறந்து சருமத்தை மாசுக்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
கரும்புள்ளிகளை மறையச் செய்யும்.முகத்திற்கு ஆவி பிடிக்கும்போது அந்த நீராவியின் தன்மையானது முகத்தில் படிந்துள்ள கொழுப்பக்களை நீக்கும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும்.
அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
முகப்பருக்களை தடுக்கலாம்.முகத்திற்கு ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள பருக்கள் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்
இறந்த செல்களை புதுப்பிக்கின்றது. நம்முடைய சருமத்தில் மாசுக்களின் காரணமாகவும் வெப்பத்தின் காரணமாகவும் இறந்த செல்கள் பல காணப்படுகின்றன. ஆவி பிடிப்பதன் மூலமாக அந்த இறந்த செல்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். இதனால் சருமம் பளிச்சென்று காட்சியளிக்கும்.