தூதரகம் மீது தாக்குதல்: படைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு!
ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்ட நிலையில், தமது படையினரை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய ஆயுதக் குழுக்கள் மீது, அமெரிக்க விமானப்படை மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 750 அமெரிக்கப் படையினரை மத்திய கிழக்குக்கு அனுப்ப அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளரான மார்க் எஸ்பேர், விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தாத் சம்பவம் போன்று, அமெரிக்கப் படையினரின் தளங்கள் மற்றும் அவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.