ஓடுபாதையை விட்டு வீதியில் ஓடிய விமானம்!
ஈரானில் விமானம் ஒன்று தனது ஓடு பாதையை விட்டு விலகி வீதிக்கு வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஈரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து மக்ஸ்ஹர் நகருக்கு விமானம் ஒன்று 135 பயணிகளுடன் நேற்றுக் காலை புறப்பட்டது.
பின்னர், மக்ஸ்ஹர் நகரிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானம் ஓடுபாதையை விட்டு விலகி, நெடுஞ்சாலைக்குச் சென்றது.
இதை அவதானித்த பயணிகள் அலறத் தொடங்கினர்.
பின்னர், நெடுஞ்சாலையின் தரையுடன் உரசுப்பட்ட விமானம் சிறிது தூரம் சென்றநிலையில் நின்றது.
இதையடுத்து அவசர நிலை வழியால் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தின் அடிபாகம் முழுவதுமாகச் சேதமடைந்தபோதும், பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியமை குறிப்பிடத்தக்கது.