வயிற்றுப் புண், வாய்புண், நெஞ்செரிவு, போன்றவற்றிற்கு இயற்கை முறையில் உடனடி தீர்வு…!அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் அறிய படுத்துங்கள்…!!
கிராமத்தில் எல்லா இடத்திலும் இருக்க கூடிய ஒரு கீரை தான் இந்த மணத்தக்காளி, இதனை சுண்டல், சம்பல், போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். ஆனால் சிலர் இதை காட்டு கீரை சாப்பிட மாட்டோம் என்பார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் தெரிந்தால் நிச்சயம் இந்த கீரையை ஒதுக்க மாட்டீர்கள். சரி வாங்க பார்க்கலாம்.முதலில் மணத்தக்காளி எந்த நோய்களுக்கு உடனடி தீர்வு கொடுக்கிறது என பார்க்கலாம்.
அல்சர் என்று சொல்லப் படுகின்ற வயிற்றுப் புண், இது அதிகமானோருக்கு இருக்கும் ஒரு நோயாகவும். இதற்கு முதல் காரணம் காலை உணவை நாம் எடுத்துக் கொள்ளாதது தான்.சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் புண் ஏற்படுவது வழக்கம். அது மட்டும் இன்றி நெஞ்செரிச்சல், வயிறெரிச்சல், போன்றவையும் வயிற்றுப் புண்ணினால் ஏற்படுகின்றது.
இவற்றுக்கு சிறந்த அதே நேரம் உடனடி தீர்வாகவும் இருக்கிறது மணத்தக்காளி. அதே போல் வாய் புண், தொண்டை வலி, சிறு நீரக கற்கள், மலச்சிக்கல், காச நோய், கல்லீரல் பாதிக்கப் பட்டவர்கள், காச்சல் வந்து உடல் பலவீனமானவர்கள் இப்படி ஏராளமான நோய்களை இந்த மணத்தக்காளி குணமாக்குகிறது.! இந்த மணத்தக்காளி சூப் எப்படி செய்வது என பார்க்கலாம்.
முதலில் 15 சின்ன வெங்காயத்தை உரித்து சின்னதாக வெட்டிக் கொள்ளுங்கள். மணத்தக்காளி கீரையை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைய்யுங்கள். அதில் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை போடுங்கள் ஒரு கொதி வந்ததும் அதனுடன் மணத்தக்காளி கீரையும் சேருங்கள் நன்றாக கொதிக்கும் போது உப்பு சிறிது சேர்த்து வற்ற வைய்யுங்கள். இப்போது சூப் ரெடி. இதை வாரம் 3 முறை குடித்தால் போதுமானது. பயன்பெற்று பகிருங்கள்.. !