இரண்டு கிராம மக்களின் பசியை போக்கிய 6ம் வகுப்பு மாணவி ரித்தி.! இப்படி ஒரு குழந்தையை பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள் தான்…குவியும் வாழ்த்துக்கள்..!!
144 தடை சட்டத்தினால் வீட்டில் முடங்கியுள்ள ஏழைகளுக்கு சுமார் 6 லட்சத்திற்கு அதிகமான ரூபா மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கிய சிறுமி தொடர்பான செய்திகள் வெளியாகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6ம் வகுப்பில் படித்து வரும் சிறுமி ரித்தி என்பவரே இவ்வாறு உதவி உள்ளார்.
தனது பகுதி & பட அருகில் உள்ள கிராமங்களில் அன்றாடம் உழைத்து உண்ணும் குடும்பங்களில் ரித்திக்கு நண்பர்கள் இருந்ததால் கஷ்டம் பற்றி உணர்ந்திருந்தார் ரித்தி. இத்தனை நாள் வீட்டிற்குள் முடங்கி விட்டால் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துக் கொண்டிருந்த இவர் தான் சேமித்து வைத்த பணத்தை எடுத்து பார்த்த போது உறவுனர்களிடமும் உதவி கோரலாம் என நினைத்து தாய் சில்பா மற்றும் தந்தை ராம்குமாரிடம் தனது முதல் உதவியை கேட்டுள்ளார்.
தாய் தந்தை பணம் கொடுத்ததை தொடர்ந்து உறவினர்களிடம் கேட்டபோது அவருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா சேர்ந்தது. இந்த பணத்தில் 5 கிலோ அரிசி, மற்றும் தேவையான பொருட்கள் என 650 ரூபாய் மதிப்பிலான பொதிகளை அடைத்து பொலீஸாரின் உதவியுடன் தனது நண்பர்கள் உட்பட அருகில் இருந்த குடும்பங்களுக்கு பகிர்ந்தார்.
அதன் போது தான் தெரிந்தது ஏராளமான மக்கள் பசியால் குறித்த கிராமத்தில் இருப்பது. என்ன செய்வதென தெரியாமல் விழித்த ரித்தி தாய் தந்தையின் உதவியுடன் இணையத்தில் தான் செய்த உதவி பற்றியும் மக்கள் பசியால் வாடுவது பற்றியும் குறிப்பிட்டதை தொடர்ந்து சுமார் 8 நாட்களில் 6 லட்சம் நிதி சேர்ந்தது. உடனடியாக தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் செயற்பட்ட ரித்தி அருகில் இருந்த 2 கிராம மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கியுள்ளார். இது பொலீஸார் உட்பட பலரது பாராட்டையும் பெற்று வருகிறது..!