வீட்டில் இருக்கும் போது இயற்கை முறையில் இன்னும் அழகாக மாறலாமே..! இதோ இலகுவான சூப்பர் டிப்ஸ்..!
இயற்கை கற்றாழையை, நமக்கு அதிகமான மருத்துவ குணத்துடன் தந்துள்ளது. கற்றாழை உடலில் தோன்றும் அனைத்து, விதமான பிரச்சனைகளை தீர்க்கின்றது. கற்றாழை ஜெல்லை தான் நம்முடைய, அழகிற்கு பயன்படுத்துகிறோம். அதில் குளிர்ச்சி தன்மை அதிகம் இருப்பதால், கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
வெயிலில் நாம் திரிவதால், சருமம் கறுத்து போய்விடும், கருமை ஏற்படும் போது, கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால் , கறுத்த சருமம் மாறிவிடும் இன்றைய வாழ்க்கை முறையில் நம்முடைய சருமம் சுருக்கம் விழுந்து, இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை பெற்று விடுவோம். இதனை சரி செய்யவும் கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவலாம்.
முகப்பருக்கள் அதிகம் வருபவர்கள் தினமும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தவும், கற்றாழை தனக்ககென தனித்துவ தன்மை கொண்டது.நகங்கள் அடிக்கடி உடைபவர்களுக்கு, அதனை வலிமைப்படுத்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.வெயிலில் செல்ல முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, செல்லவும் இது சிறந்த சன் ஸ்க்ரீனாகவும் கருதப்படுகிறது.
சிலரின் முகத்தை பார்க்கும் போது பளிச் என பொலிவாக தெரியும். அப்படி பொலிவான சருமத்தை பெற கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.இரவில் படுக்கும் போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வாருங்கள்.
இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பகல் நேரத்தில் லிப் பாம் போன்றும் பயன்படுத்தலாம். நாளடைவில் உதட்டின் வறட்சி மாறி அழகாக மாறிவிடும்.கண்களில் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை போக்கி, அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றம் தெரியும்.