மூக்கின் மேல் ஆங்காங்கே உள்ள கருப்புப் புள்ளிஉங்கள் அழகைக் கெடுக்கின்றதா..! அப்போ இதைச் செய்யுங்க…
பொதுவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் போது, சருமத்தில் அழுக்குகள், தூசிகள் போன்றவை படும் போது, அவை சருமத்துளைகளில் தங்கிவிடுகின்றன. சிலசமயங்களில் அந்த அழுக்குகள் நீண்ட நேரம் தங்குவதால், அவை கருப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன. இத்தகையது கரும்புள்ளிகளாக முகத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இந்த பிரச்சனையால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இத்தகைய பிரச்சனையே போக்குவதற்கு நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இருப்பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் இல்லை. ஆகவே இந்த பிரச்சனைக்கு இயற்கை முறை தான் ஒரே வழி. அதுமட்டுமின்றி ஒருசில செயல்களை அவ்வப்போது செய்து வர வேண்டும். சரி, இப்போது மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்ப்போமா.!
உருளைக்கிழங்கை அரைத்து அதனை மூக்கின் மேலே கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை சாறும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதற்கு எலுமிச்சை சாற்றினை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து வர, கரும்புள்ளிகள் அகலும்.
வேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். எனவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால், எளிதில் கரும்புள்ளிகள் போய்விடும்.
பால் ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். அதற்கு ஒரு காட்டனை பாலில் நனைத்து, முகத்தில் தேய்த்து துடைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி விடுவதோடு, கரும்புள்ளிகளும் நீங்கும்.
உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தாலும், கரும்புள்ளிகள் வரும். எனவே தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் நன்கு பொலிவோடு, கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும்.
கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. ஆகவே இதனை மேலும் பயன்படுத்தினால், கரும்புள்ளிகள் நீங்காமல் இருக்கும் ஆயில் ஃபேஸ் க்ரீம் : (Oily Face Cream) எண்ணெய் பசையுள்ள ஃபேஸ் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து மேலுள்ள பொருட்களை உபயோகித்தால் நல்ல பலனைப் பெறலாம்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”