சாந்தான்குளம் தந்தை, மகன் கொலை குற்றவளிகளில் ஒருவரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வைத்திதசாலையில் அனுமதி..! இடது கை செயலிழப்பு என தெரிவிப்பு..!!
சாத்தான்குளம் மகன் கொலை குற்றத்தில் கைதான சாந்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் இடது கை இயக்கவில்லை என்ற தகவல் வெளிதாகி உள்ளது.
சாந்தான்குளம் பகுதியில் மொபைல் கடை வைத்திருந்த ஜெயராஜ் என்பவர் விதிக்கப் பட்ட நேரத்தை விட அதிக நேரம் கடையை திறந்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்ட ஜெயராஜ் கைது செய்தது தொடர்பாக கேட்க சென்ற அவரது மகன் பென்னிக்ஸையும் கைது செய்து அடித்து கொலை செய்தனர் பொலீஸார்.
இந்த கொலை வழக்கில் சாந்தான்குளம் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் கைது செய்யப் பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்த ஸ்ரீதருக்கு இடது பக்க கை இயங்கவில்லை என கூறியதை தொடர்ந்து அரச வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் ஏற்கனவே நடந்த விபத்து ஒன்றில் முதுகு தண்டுவாடம் பாதிக்கப் பட்டு சிகிச்சை எடுத்ததால் இந்த பிரச்சனைகள் மீண்டும் தந்துள்ளகாத தெரிவித்துள்ளதுடன் ஜாமினின் எடுத்து தொடர்ந்து சிகிச்சை செய்த நினைத்திருப்பதாக கூறியுள்ளார். மேலதிக சிகிச்சைகள் தற்போது இடம்பெற்று வருகிறது..!!