புதிய டிரோன்களை உருவாக்கிய சீனா…!!
உலகளவில் குறைந்த செலவில், ஸ்பைடர்மேனை போல செயல்திறன் கொண்ட சிறிய டிரோன்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சீனா தலை சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் சீனாவின் ஏரோஸ்பேஸ் அறிவியல் மற்றும் தொழில் நிறுவனம் புதிய டிரோன்களை உருவாக்கியுள்ளது. இந்த டிரோன்களில் எதிரி நாட்டு டிரோன்களை குறிவைத்து அதன் மீது 16 மீட்டர் அளவிலான வலையை வீசி அதனை பிடிக்கும் திறன் உள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்த டிரோன்களின் மீது வலையை வீசிவதால், அவை செயல் இழந்து தரையில் விழுந்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறித்த டிரோன்கள் சீனாவின் பாதுகாப்பு துறையுடன் இணைந்து சிறிய, வேகம் குறைந்த மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் எதிரி நாட்டு டிரோன்கள் மற்றும் சிறிய விமானங்களையும் குறிவைத்து பிடிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டிரோன்கள் 6 கோணங்கள் கொண்டது. இது கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்கும் பயன்படும் என சீனா இராணுவ இணையதளம் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானங்களை எதிர்கொள்ள கூடிய வகையில் எல்ஜே- ஐ ((LJ-I)) டிரோனை சீனா அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.