ஜியாங்சு மாநில நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து…!!!
சீனாவில் ஜியாங்சு மாநில நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 03 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வூசி நகரில் இடிந்து விழுந்த பாலம் அதன் அடியில் இருந்த மூன்று கார்கள் மீது விழுந்ததில் . அந்த இரு கார்களிலிருந்த 03 பேரும் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது வாகனத்தில் ஆளில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் இடிந்து விழுந்த போது அதன் மேல் இருந்த மூன்று கார்களும் இரு சரக்கு வண்டிகளும் விழுந்துள்ளது.
பாலம் இடிந்து விழும் காட்சி சமூக ஊடகங்களில் காணொளி மூலம் பரவி வருகிறது. இடிபாடுகளுக்குள் கார்கள் சிக்கிக் கிடக்கின்றனர்.
மேலும் இந்த விபத்து நடந்த இடத்தில் மருத்துவ உதவி வாகனங்கள் விரைந்து வந்துள்ளது. மிதமிஞ்சிய அளவு பாரம் ஏற்றிச்சென்ற வாகனத்தின் காரணமாகப் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.