சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விடுத்த எச்சரிக்கை…!!!
சீனாவிற்கு தாக்குதல் நடத்த நினைப்பவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக போராட்டங்கள் வன்முறைகள் நீடித்து வருகின்றன. இந்த போராட்டங்கள் சீனாவை உலுக்கியதைத் தொடர்ந்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும் மற்றும் கூடுதலான ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்றும் கோரி போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
ஜூன் மாதத்திலிருந்து இடம்பெற்று வருகின்ற போராட்டங்கள் தொடர்பாக, இது வரைக்கும் சுமார் 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவை எதிர்க்க நினைப்பவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜி ஜின்பிங் கூறியதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
‘சீனாவைத் எதிர்க்க நினைக்கும் எந்த அந்நிய சக்தியும், சீன மக்களுக்கு எதிரானது தான். சீனாவில் இருந்து எந்த பகுதியை யார் எதிர்த்து நிண்டாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் உடல்கள் சுக்கு நூறாக்கப்படும். எலும்புகள் மண்ணோடு மண்ணாக போகும்’ என கூறப்பட்டுள்ளது.
அதையடுத்து ஜி ஜின்பிங் எந்த பிராந்தியத்தையும் குறிப்பிட்டு இதனை கூறவில்லை எனினும் ஹாங்காங்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.