ஐஸ்கட்டி மீது இருக்க வைத்து கொடுமை. நாப்கினில் விசா. குவைத்தில் சென்னை பெண் அனுபவித்த பாலியல் சித்திரவதை..!!
சென்னையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற 34 வயது பெண் ஒருவர் குவைத்தில் இருந்து மீட்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரைப் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் பிரபல கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு வேலை செய்துகொண்டிருந்த கிருஷ்ண வேணிக்கு பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
அவர் கிருஷ்ணவேணியின் குடும்ப சூழ்நிலையை தெரிந்துகொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பற்றி பேசி ஆசை தூண்டியுள்ளார். ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அனுப்பி வைப்பதாகவும் பல லட்சம் சம்பாதிக்க முடியும் எனவும் ஆசை வார்த்தை கூற அத நம்பிய கிருஷ்ணவேணி குடும்பாத்தாருடன் பேசி வெளி நாடு செல்ல சம்மதித்துள்ளார்.
குறித்த பெண் ஏஜெண்ட் ஒருவரிடம் கிருஷ்ணவேணியை அறிமுகப் படுத்த குவைத்துக்கு அனுப்பப் பட்டார் கிருஷ்ணவேணி. அங்கு சென்றபின் உணவு இல்லாமல் கஷ்டப் பட்ட கிருஷ்ணவேணி 2 மணி நேர தூக்கமே இருந்துள்ளது. ரொட்டி மட்டுமே உணவு. அது மட்டும் இன்றி பாலியல் தொல்லைகளும் தாங்க முடியாமல் இருந்துள்ளது.
இது பற்றி ஏஜெண்ட் இடம் கூறிய போது இரண்டு வருடங்கள் இருக்க வேண்டுமென கூறியதுடன் இது பற்றி கிருஷ்ணவேணி வேலைபார்த்த வீட்டுக்கும் கூறப் பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த வீட்டுகாரன் கிருஷ்ண வேணியை ஐஸ் கட்டியின் மீது அமர வைத்து கொடுமை செய்துள்ளான்.
கொடுமை தாங்க முடியாத அவர் தனது குடும்பத்தினருக்கு அனைத்தையும் கூற குடும்பத்தினர் தமிழச்சி தங்கபாண்டியன் உதவியுடன் 20 நாட்களின்நாட்களின் பின் மீட்டுள்ளனர். இது பற்றி கிருஷ்ணவேணி கூறிய போது இங்கிருந்து போகும் போது எனக்கு இரண்டு விசா கொடுக்கப் பட்டது.
அதில் ஒன்றை நாப்கினில் வைத்து உள்ளாடைக்குள் வைக்க சொன்னார்கள். அங்கு சென்றதும் அதனை வெளியே எடுத்துக் கொடுத்தேன்.போன முதல் நாளில் இருந்து ஆரம்பித்த கொடுமை இறுதி வரை தொடர்ந்தது என்கிறார் கண்களை துடைத்தபடி..!!